ரேஷன் பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்யும் புதிய திட்டம்!


ரேஷன் பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்யும் புதிய திட்டம்!


நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது. தேர்தலை சந்திக்கும் போதே முதலமைச்சர் வேட்பாளர் பகவத் மான் சிங், பஞ்சாப் மாநிலத்தை மற்ற நாடுகளை போன்று அல்லாமல் மீண்டும் பழைய பஞ்சாப்பாக மாற்ற இருப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிகப்படியான சட்டமன்றத் தொகுதிகளை பிடித்த ஆம் ஆத்மி ஆட்சியை அமைத்துள்ளது.

புதிய ஆட்சியை அமைத்துள்ள இந்த அரசு புதுப்புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் சிங், “மக்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆம் ஆத்மி அரசு, மக்களின் வீட்டிற்கே ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை துவங்கியுள்ளது. இதன் மூலம் தரமான ரேஷன் பொருட்கள் டெலிவரி செய்யப்படும். இனி சாமானியர்கள் ரேஷன் கடைகளில் வரிசையில் நின்று பொருட்களை வாங்க காத்திருக்க தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog